தற்போதைய நம்முடைய மேஜைக்கணினிக்கு(PC) மாற்றான ஐபேடை ஆப்பிள் நிறுவனம் 600 டாலர் முதல் 900 டாலர் விலையில் சந்தையில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக தற்போது வெளியிட்டுள்ளது மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சர்ஃபேஸ் ப்ரோ என்பதற்கு கிடைத்த வரவேற்பை கண்டு அவ்வாறான வசதி வாய்ப்புகளை கொண்ட டேப்ளெட்டிற்கும் மேஜைக்கணினிக்கும் மாற்றான இந்த ஐபேடை ஆப்பிள் நிறுவனம் வெளியிட்டுள்ளது இதில் ஒரே சமயத்தில் பல்வேறு ஸ்நாப் பயன்பாடுகளை செயல்படுத்திடமுடியும் இதில் தரவுகளை உள்ளீடு செய்வதற்காக தேவையெனநாம் விரும்பினால் சிறிய விசைப் பலகையையும் ஆப்பிள்பென்சிலையும் வாங்கி பயன்படுத்தி கொள்ளலாம் . இதில் சிபியூவின் செயல்வேகமும் வரைகலை திறனும் வழக்கமான கணினியைபோன்று இருமடங்காகஉள்ளது இதன் முன்பக்கத்தில் 12 எம்பி அளவுள்ள படப்பிடிப்பு கேமரா வசதி கொண்டது இதுஐஓஎஸ்9 எனும் இயக்கமுறையுடன் அனைத்து செல்லிடத்து பேசிகளின் பயன்பாடுகளும் இயக்கும் வசதிகொண்டது இது பயன்படுத்த எளிதானது டேப்ளெட்டைவிட மேம்பட்ட வசதிகொண்டது இது மேஜைக்கணினிக்கு சமமான பணியை செய்திடும் திறன் மிக்கது
தற்போதைய நம்முடைய மேஜைக்கணினிக்கு(PC) மாற்றான ஆப்பிள் நிறுவனத்தின் ஐபேடு ஒரு அறிமுகம்
25 மே 2016 பின்னூட்டமொன்றை இடுக
in அறிவுரைகள்(Tips), வன்பொருள் செயல்முறை(hardware)